திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பது பாஜகவின் கலவர முயற்சிக்கு தடையாக உள்ளது..! -சிபிஎம் குற்றச்சாட்டு

Published : Jun 12, 2022, 03:46 PM IST
திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பது பாஜகவின் கலவர முயற்சிக்கு தடையாக உள்ளது..! -சிபிஎம் குற்றச்சாட்டு

சுருக்கம்

மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு பொது நிகழ்வுகளில் பங்கேற்பது மிகவும் இயல்பாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவினர்  இனிமேல் தாங்களும் பொது நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார்கள் என எடுத்துக் கொள்ளலாமா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

அமைச்சருக்கு பாஜக எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற முருகன் ஆலயமான குமாரகோவில் வேளிமலை முருகன் ஆலய தேரோட்டத்தில் தேரின் வடத்தை இந்து மத சம்பிரதாயங்களை கடைபிடிப்பவர்கள் தவிர மற்றவர்கள் பிடிக்கக்கூடாது என்று இந்துக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் கிறிஸ்தவரான அமைச்சர் மனோ தங்கராஜ் தேரின் வடத்தை பிடித்து இழுத்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கண்டன ஆர்பாட்டமும் நடத்தினர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோயில் திருவிழாவில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள். இந்நிகழ்வையொட்டி குமரி மாவட்ட மக்கள் மத்தியில் மத வெறுப்பை விதைக்கும் நோக்கத்துடன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். இது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். தமிழ்நாட்டில் ஊர் திருவிழாக்களில் பல்வேறு மதத்தினரும் பங்கெடுப்பதும், முறை செய்வதும் மிகவும் இயல்பாக இருந்து வருகிறது. இந்த நல்லிணக்க சூழல் சங்க பரிவாரத்தின் கலவர முயற்சிகளுக்கு தடையாக இருக்கிறது. அதனாலேயே அதனை கெடுப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது. குமரியில் முன்பு ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ‘மத அடிப்படையில் கலவரம் நடக்கும்’ என்று மிரட்டல் தொனியில் பேசியதும், அதை அங்கு கூடியிருந்தவர்கள் ஆர்ப்பரித்து வரவேற்றதையும் பார்த்தோம். இப்போது வேளிமலை முருகன் கோயில் தேரோட்டத்தையொட்டி உருவாக்கப்படும் சர்ச்சையும், கலவர நோக்கம் கொண்ட வெறுப்பு பிரச்சாரத்தின் பகுதியே ஆகும்.

கலவர முயற்சிக்கு தடை

ஏற்கனவே, குமரியில் பல்வேறு கோயில் வளாகங்களை சங்க பரிவார அமைப்பினர் பயன்படுத்தி, வெறுப்பு மூட்டி வருகின்றனர். இப்போது அது வெளிப்படையாகியுள்ளது. எனவே இந்த விசயத்தில், அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு பொது நிகழ்வுகளில் பங்கேற்பது மிகவும் இயல்பாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவினர்  இனிமேல் தாங்களும் பொது நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார்கள் என எடுத்துக் கொள்ளலாமா? தமிழ்நாட்டில் பல்வேறு தேர் திருவிழாக்களில், சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் காரணமாக பட்டியல் சாதி மக்கள் பங்கேற்பு மறுக்கப்படுகிறதே; அங்கெல்லாம் செல்ல மறுக்கும் சங்க பரிவாரங்கள், நல்லிணக்கம் நிலவும் இடங்களில் வந்து கலகம் செய்ய முயற்சிப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுகின்றன. பாஜகவின் உள்நோக்கத்தை புரிந்துகொண்டு மக்கள் அவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்றும், முற்றாக புறக்கணிக்க வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வேண்டுகோள் விடுப்பதாக அந்த அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆளுநரின் பேச்சின் பின்னனியில் பலத்த சந்தேகம்.!சதிச்சிந்தனைகளுக்கு தூபம் போடுகிறது-டி.ஆர்.பாலு ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S