சென்னை மக்களே இது உங்களுக்கு தான் தாம்பரம் - சென்னை கடற்கரை ரயில் ரத்து!

Published : Dec 08, 2018, 01:30 PM ISTUpdated : Dec 08, 2018, 01:47 PM IST
சென்னை மக்களே இது உங்களுக்கு தான் தாம்பரம் - சென்னை கடற்கரை ரயில் ரத்து!

சுருக்கம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிதாக மேம்பால நடைமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, இன்று இரவு கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிதாக மேம்பால நடைமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, இன்று இரவு கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வந்துசெல்லும் 10 மற்றும் 11 ஆகிய நடைமேடையில் புதிதாக மேம்பால நடைமேடை அமைக்கப்பட்டுவருகிறது. இதற்காக இன்று இரவு 6 மணி நேரம் இரு நடைமேடையிலும் ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது.

கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - கடற்கரை ஆகிய இருமார்க்கங்களில் இருந்து புறப்படும் ரயில்கள் இன்று இரவு 11.30 மணி முதல் நாளை காலை 5.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே வேலையில் செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!