800 மீ தூரம் வைக்கபட்ட மேடையில் நடந்து சென்று ரசிகர்கள் கொடுத்த கட்சி துண்டை அணிந்து கொண்ட தளபதி!

Published : Oct 27, 2024, 04:55 PM IST
800 மீ தூரம் வைக்கபட்ட மேடையில் நடந்து சென்று ரசிகர்கள் கொடுத்த கட்சி துண்டை அணிந்து கொண்ட தளபதி!

சுருக்கம்

TVK Maanadu Thalapathy Vijay Ramp Walk: விழுப்புரத்தில் நடைபெற்று வரும் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விஜய்யின் பெற்றோர், சினிமா பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்ட மாநாட்டில், விஜய் கட்சிக் கொடியேற்றி, தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.

TVK Maanadu Thalapathy Vijay Ramp Walk: தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் தளபதி விஜய்யின் பெற்றோர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் கலந்து கொண்டனர். விஜய்யின் இந்த டிவிகே மாநாட்டிற்கு ஜெயம் ரவி, நடிகர் பிரபு, சிபிராஜ், அர்ஜூன் தாஸ் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

த.வெ.க மாநாடு; அரசியல் கட்சி தலைவராக துள்ளிக்குதித்து மேடைக்கு என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்!

இந்த நிலையில் பிற்பகல் 3 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தீம் பாடலான தமிழன் கொடி பறக்குது; தலைவன் யுகம் பொறக்குது என்ற பாடலுடன் மாநாட்டு நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து, கலை நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றது. இறுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் மேடைக்கு வருகை தந்தார்.

முதலில் மேடையிலிருந்து ரசிகர்களை வணங்கிய அவர், பின்னர் மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த 800 மீ தூரத்திற்கு நடை மேடையில் நடந்து சென்று ரசிகர்கள் கொடுத்த கட்சி துண்டை அணிந்து கொண்டு அவர்களை வணங்கினார். இதைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு 100 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த கட்சி கொடியையும் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!