டாஸ்மாக் அமைக்கும் விதிகளில் திருத்தம்... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

Published : Feb 14, 2022, 07:29 PM IST
டாஸ்மாக் அமைக்கும் விதிகளில் திருத்தம்... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

சுருக்கம்

டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று கிராமப் பஞ்சாயத்துகள், கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதைச் செயல்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றம், இரு வேறு உத்தரவுகளைப் பிறப்பித்ததால், வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் கடைகள் தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகளும், கிராம சபைகளும் தீர்மானம் நிறைவேற்றினால் அதைச் செயல்படுத்துவது தொடர்பாக விதிகளில் திருத்தம் கொண்டுவருவது பற்றி அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், டாஸ்மாக் கடைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறி, திருத்த விதிகளைத் தாக்கல் செய்தார். ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்காமல் எந்தக் கடைகளையும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த திருத்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாள்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீர்மானத்தின் மீது எந்தப் பயனும் இல்லைஇதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்குகளை மீண்டும் சம்பந்தப்பட்ட அமர்வுகளுக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், முழு அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட கேள்வியை முடித்துவைத்தனர். முன்னதாக நீதிபதிகள், குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள நிலையில் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலம் மூலமாக மதுபானங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல ஒரு கிராமத்தில் கடை தொடங்க எதிர்ப்புத் தெரிவித்தால், அருகில் உள்ள கிராம கடைகளுக்குச் செல்வர் என்னும்போது கிராம சபை அல்லது பஞ்சாயத்துகளின் தீர்மானத்தின் மீது எந்தப் பயனும் இல்லை எனக் கருத்துத் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!