தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அனீஸ் சேகர் திடீர் ராஜினாமா.! காரணம் என்ன.?

Published : Mar 01, 2024, 03:18 PM ISTUpdated : Mar 01, 2024, 03:19 PM IST
தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அனீஸ் சேகர் திடீர் ராஜினாமா.! காரணம் என்ன.?

சுருக்கம்

எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த தமிழக பிரிவு ஐஎஎஸ் அதிகாரியான அனீஸ் சேகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா

தமிழக பிரிவு ஐஎஎஸ் அதிகாரியான அனீஸ் சேகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா ஏற்றுக் கொண்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவருடைய பதவியை ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் மருத்துவரான அனீஸ் சேகர், தனது சொந்த மாநிலமான கேரளத்தில் மருத்துவர் பணியைத் தொடரவுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.  கேரளத்தைச் சேர்ந்த அனீஸ் சேகர், 2011-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மதுரை மாவட்ட ஆட்சியரா இருந்தபோது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

ராஜினாமா காரணம் என்ன.?

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தை வலியுறுத்தும் வகையில், ஆட்சியர் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு சைக்கிளிலேயே சென்று கவனத்தை ஈர்த்தார். இவர்  தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த அவர் சொந்த காரணங்களுக்காக அவருடைய ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்

இஸ்ரோ விளம்பர சர்ச்சை: முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக பாஜக..
 

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: 20 மாதங்களில் 2 லட்சம் விற்பனையான ஸ்கூட்டர்.. இந்திய சாலைகளில் வலம் வருது.. எது தெரியுமா?