
Entrepreneurship training : தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் பல்வேறு தொழில்முனைவோர் பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிறுவனம், தமிழ்நாட்டில் முதல் தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை (MSME) ஊக்குவிக்கவும் செயல்படுகிறது. இதற்காக, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மற்றும் பிற திட்டங்கள் மூலம் பயிற்சி மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது புதிய பயிற்சி திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் தொடர்பான பயிற்சி வரும் 25.06.2025 முதல் 27.06.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பிளாக் ஃபீனைல், கட்டிங் ஆயில், கிரீஸ், தொழில்துறை சோப்பு எண்ணெய், பைப் கிளீனிங் பவுடர். வாட்டர் டேங்க் கிளீனிங் லிக்விட், டிஷ்வாஷ் சோப். டிடர்ஜென்ட் சோப், டெட்டால், எஸ்எஸ் மெட்டல் கிளீனிங் லிக்விட், கார் பாலிஷ் மற்றும் இன்டஸ்ட்ரியல் ஃப்ளோர் க்ளீனிங், ஃப்ளோர் கிளீனர், டிஷ்வாஷ் திரவம், சோப்பு திரவம் ஃபேப்ரிக் சாஃப்ட்னர் & கண்டிஷனர். கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
பயிற்சிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 032. 8668102600 600 முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல மற்றொரு அறிவிப்பில், சென்னையில், 2 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 21.06.2025 முதல் 22.05.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பேக்கரி தயாரிப்புகள் கிளாசிக் பிரவுனி, ப்ளாண்டீஸ் டிரிபிள் சாக்லேட் பிரவுனி நட்ஸ் ஓவர்லோடட் பிரவுனி, முட்டை இல்லாத பிரவுனி பழம் மற்றும் கொட்டை பிரவுனி பிரீமிக்ஸிலிருந்து பிரீமிக்ஸ் குறைந்த விலை முட்டை இல்லாத பிரவுனி கிரீம் சீஸ் பிரவுனி வீட்டில் பிரீமிக்ஸ் முட்டை இல்லாத ரெட்வெல்வெட் கிரீம் சீஸ் சுழல் பிரவுனி பிரீமியம் லோட்டஸ் பிஸ்காஃப் பிரவுனி.
தினை பிரவுனி ஆரோக்கியமான பேரீச்சம்பழம் சாக்லேட் மற்றும் கலவை இல்லாத பிரவுனி வேர்க்கடலை வெண்ணெய் பிரவுனி பிரவுனி தயாரித்தல் பிரவுனி கனாச் சிம்பிள் சாக்லேட் சாஸ் டப் பிரவுனி டிசைனர் பிரவுனி பேக்கிங் மற்றும் விலை, தயாரிப்பின் லேபிளிங் சந்தைப்படுத்தல் அம்சங்கள் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.