
தலைமைசெயலகம்- இட நெருக்கடி
நூற்றாண்டுக்கும் மேல் பழமையான செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக தலைமைச்செயலாகம் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் இட நெருக்கடி காரணமாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாமல் திணறும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 2006 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி காலத்தில் புதிய தலைமைசெயலகம் ஓமந்தூரார் தோட்டத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. இதனையடுத்து அங்கு தலைமைசெயலாகம் மாற்றப்பட்டது.
ஆனால் இதனை தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சியில் ஓமந்தூரார் தோட்டதில் செயல்பட்டு வந்த தலைமையெலகத்திற்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா செல்லாமல் மீண்டும் பழைய இடமான செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு தலைமைசெயலகத்தை மாற்றினார். இதனால் ஓமந்தூரார் கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்தநிலையில் தற்போதைய தலைமைசெயலகத்தில் இட நெருக்கடி காரணமாக திணறி வருகிறது. இதனையடுத்து புதிய இடத்தை தலைமை செயலகத்தை மாற்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அச்சத்தில் ஊழியர்கள்
இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி என்பது மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் குறிப்பாக தலைமைச் செயலக பழைய கட்டடத்தில் பணியாளர்கள் எளிதாக நடமாட முடியாத நிலை உள்ளது. தீ விபத்துகள் ஏற்பட்டால், பெரிய அளயில் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. இதை எல்லாம் தவிர்க்கும் வகையில், மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கனவு தலைமைச் செயலகமான, ஓமந்தூரார் வளாகத்திற்கு தலைமைச் செயலகத்தினை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் அவர்கள் விரைந்து எடுத்திட வேண்டும் என கடந்த 19-01-2023 அன்று நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுகாதாரமற்ற நிலையில் தலைமைசெயலகம்
தற்போது தலைமைச் செயலக பழைய கட்டடத்தில் இட நெருக்கடி என்பது மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. மேலும், பணியாளர்களின் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதும் மிகவும் சிரமமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் நாமக்கல் கவிஞர் மாளிகையின் உறுதித்தன்மை என்பது கேள்விக்குறியாக உள்ளது. சில தளங்களில் மேற்புற பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுவது நிகழ்ந்தவண்ணம் உள்ளது. அனைத்துத் தளங்களிலும் மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைக்கப்பட்டு, அகத்தக் காற்று வெளியேறுவதற்கான முறையான அமைப்புகள் இல்லாது அக்கட்டடத்திற்கு குளிர்சாதன வசதி அளிக்கப்பட்டுள்ளதால், சுகாதாரமற்ற நிலை பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தனது கனவுத் திட்டடமான தலைமைச் செயலகத்தினை ஓமந்தூரார் வளாகத்தில் அமைத்தார்.
ஓமந்தூராருக்கு மாற்ற கோரிக்கை
ஆனால், அவரது கனவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, முத்தமிழ் அறிஞரின் களவினை நனவாக்கும் வாய்ப்பு என்பது உருவாகியுள்ளது. தலைமைச் செயலகப் பணியாளர்களின் நலளையும் அமைச்சர்கள்- சட்டமன்ற உறுப்பினர்களின் நலனையும் பொது மக்கள் தங்களது குறைகளை தீர்ப்பதற்காக தலைமைச் செயலகத்தினை எளிதில் அணுகக்கூடிய வகையிலும் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவரின் தலைமைச் செயலகக் கனவினை நிறைவேற்றும் வகையிலும், உடனடியாக தலைமைச் செயலக வளாகத்தினை அரசினர் தோட்ட வளாகத்திலுள்ள ஓமந்துாரார் கட்டடத்திற்கு இட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அச் சங்கம் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளது