மகப்பேறு விடுப்பில் அரசு பெண் ஊழியர்களுக்கு புதிய சலுகை! சட்டப்பேரவையில் 'மாஸ்' அறிவிப்பு!

Published : Apr 28, 2025, 10:57 AM ISTUpdated : Apr 28, 2025, 11:06 AM IST
மகப்பேறு விடுப்பில் அரசு பெண் ஊழியர்களுக்கு புதிய சலுகை! சட்டப்பேரவையில் 'மாஸ்' அறிவிப்பு!

சுருக்கம்

பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பில் தமிழ்நாடு அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

New concession in maternity leave for Tamil Nadu Government Employees: தமிழ்நாட்டில் பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பில் தமிழ்நாடு அரசு புதிய மாற்றங்களை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இது தொடர்பாக சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், ''திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பை 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. 

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது.   

மகப்பேறு விடுப்பு 

மகளிர் முன்னேற்றத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது வழியில் அரசு ஊழியர்களுக்கு அரணாக, அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக திராவிட மாடல் அரசு என்றென்றும் தொடரும்'' என்று தெரிவித்துள்ளார். 

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு! மொத்தம் 9 முத்தான அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

பெண் ஊழியர்கள் மகிழ்ச்சி 

அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது பெரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. முன்பு இருந்த விதிகளின் படி மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது. இப்போது அரசின் புதிய அறிவிப்பு பெண் ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு ரியல் ஜாக்பாட்! ஈட்டிய விடுப்பு சரண் முறை மீண்டும் அமல் - முதல்வர் உத்தரவு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்