ஜன.20ல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை.. சபாநாயகர் அறிவிப்பு

Published : Dec 26, 2025, 12:51 PM IST
 appavu

சுருக்கம்

2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத்தின் முதலாவது ஆய்வு கூட்டம் வருகின்ற ஜனவரி 20ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டமானது ஆளுநரன் உரையுடன் தொடங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2026ம் ஆண்டு புத்தாண்டில் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டம் வருகின்ற ஜனவரி 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

இது தொடர்பாக தலைமச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “வருகின்ற 2026ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம் வருகின்ற ஜனவரி 20ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு தமிழக அரசின் உரையை வாசிப்பார். அதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு மொத்தமாக எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலைமை தான் எங்களுக்கும்! பழைய பென்ஷன் தான் வேண்டும்! பெருகும் ஆதரவு விழி பிதுங்கும் முதல்வர்!
சிறுமியிடம் சில்மிஷம் செய்துவிட்டு எஸ்கேப்.. போலீசிக்கு தண்ணீ காட்டி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்.. 5 மாதங்களில் தீர்ப்பு