சவூதியில் தமிழக மீனவர்கள் 3 பேர் பலி - கப்பல் மோதி விபத்து

Asianet News Tamil  
Published : Mar 22, 2017, 09:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
சவூதியில் தமிழக மீனவர்கள் 3 பேர் பலி - கப்பல் மோதி விபத்து

சுருக்கம்

tamil fishermen died in saudi

சவுதியில் தங்கி மீன் பிடி தொழில் செய்த 3 பேர், நடுக்கடலில் ஏற்பட்ட விபத்தில் பலியானார்கள்.

கன்னியகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நெவில், ஜார்ஜ், சுகந்தன். மீனவர்கள். இவர்கள் 3 பேரும், சவுதி அரேபியாவில், தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இன்று அதிகாலையில், மேற்கண்ட 3 பேர் உள்பட சிலர், விசைப்படகு மூலம் நடுக்கடலுக்கு சென்றனர். அங்கு மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கப்பல், விசைப்படகு மீது பயங்கரமாக மோதியது.

இதில், நிலை தடுமாறி மீனவர்கள் 3 பேரும், கடலில் விழுந்தனர். தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை மீட்க, சக மீன்பிடி தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால், முடியவில்லை. அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர்.

தகவலறிந்து அந்நாட்டு மீட்பு படையினர், சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் தேடினர். அதில், சுகந்தனை சடலமாக மீட்டனர்.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் கொடூர மிருகங்கள் சுதந்திரமாக நடமாட்டம்.. இது நாடா இல்லை காடா? அன்புமணி கேள்வி..
தமிழக அரசியலை அலறவிடும் ராமதாஸ், சசிகலா கூட்டணி..! சட்டமன்ற தேர்தலை கூட்டாக சந்திப்பதாக அறிவிப்பு