
சவுதியில் தங்கி மீன் பிடி தொழில் செய்த 3 பேர், நடுக்கடலில் ஏற்பட்ட விபத்தில் பலியானார்கள்.
கன்னியகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நெவில், ஜார்ஜ், சுகந்தன். மீனவர்கள். இவர்கள் 3 பேரும், சவுதி அரேபியாவில், தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
இன்று அதிகாலையில், மேற்கண்ட 3 பேர் உள்பட சிலர், விசைப்படகு மூலம் நடுக்கடலுக்கு சென்றனர். அங்கு மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கப்பல், விசைப்படகு மீது பயங்கரமாக மோதியது.
இதில், நிலை தடுமாறி மீனவர்கள் 3 பேரும், கடலில் விழுந்தனர். தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை மீட்க, சக மீன்பிடி தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால், முடியவில்லை. அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர்.
தகவலறிந்து அந்நாட்டு மீட்பு படையினர், சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் தேடினர். அதில், சுகந்தனை சடலமாக மீட்டனர்.