
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் திடீர் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்குள் திரண்டு வந்த மாணவர்கள், ரயில்களை மறித்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.