தென் மாவட்டங்களில் கனமழை: வாட்ஸ் அப், ட்விட்டரில் உதவி கோரலாம் - தமிழக அரசு!

Published : Dec 18, 2023, 01:45 PM IST
தென் மாவட்டங்களில் கனமழை: வாட்ஸ் அப், ட்விட்டரில் உதவி கோரலாம் - தமிழக அரசு!

சுருக்கம்

தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வாட்ஸ் அப், ட்விட்டரில் பாதிப்புகளை தெரிவித்து தேவையான உதவிகளை கோரலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

திருநெல்வேலி,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்” பதிவுகளில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர்.

நீரிழிவு சிகிச்சைக்கு தேங்காய் நீரின் மூலம் மருந்து: பொள்ளாச்சி விவேகானந்தனுக்கு அண்ணாமலை பாராட்டு!

எனவே  பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும்  நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின்  வாட்ஸ்அப்எண் : 8148539914 மற்றும் “டிவிட்டர்” மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் எண் : 8148539914
டிவிட்டர்: Username - @tn_rescuerelief, @tnsdma
Facebook id: @tnsdma ஆகியவற்றின் மூலம் தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!