SIR வழக்கில் டிவிஸ்ட்.. தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு

Published : Nov 11, 2025, 06:22 PM IST
SIR Case Supreme Court orders Election Commisson

சுருக்கம்

2026 தமிழகத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் SIR பணிக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்.ஐ.ஆர்.) எதிராக ஆளும் தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே, ஆளும் தி.மு.க., ம.தி.மு.க., தமிழ்நாடு காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த எதிர்ப்பையும் மீறி தேர்தல் ஆணையம் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தன்னிச்சையானது, குழப்பம் ஏற்படுத்தும் என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் வழக்கறிஞர் விவேக் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதேபோல, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் சிவா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சார்பில் தனித்தனியாக ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

திமுக தொடர்ந்த வழக்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று முன்தினம் (நேற்றைய முன்தினம்) தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன் வழக்கறிஞர் பரஸ் நாத் சிங் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

இன்று, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தி.மு.க. தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களுடன், பீகார் மற்றும் பிற மாநிலங்களில் திருத்தப் பணிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் இந்த அமர்வு விசாரித்தது.

தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். அவர், "நவம்பர்-டிசம்பர் காலகட்டத்தில் தமிழகத்தில் மழை நிவாரணப் பணிகளில் அதிகப்படியான அதிகாரிகள் ஈடுபடுவார்கள். டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பலர் சொந்த ஊரில் இருக்க மாட்டார்கள். ஜனவரியில் அறுவடைத் திருநாளான பொங்கல் வருகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்வது என்பது சரியாக இருக்காது." என்று கூறினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு

தி.மு.க.வின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மனுக்களை உயர் நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கை மீண்டும் நவம்பர் 26-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!