ஆட்சியர் அலுவலகம் முற்றுகை? கல்லூரிக்கு பக்கத்துல சாராயக் கடை வெச்சா மக்கள் சும்மா இருப்பாங்களா?

 
Published : Apr 22, 2017, 08:52 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
ஆட்சியர் அலுவலகம் முற்றுகை? கல்லூரிக்கு பக்கத்துல சாராயக் கடை வெச்சா மக்கள் சும்மா இருப்பாங்களா?

சுருக்கம்

Siege of the Collectorate Office Are the people wearing the alcoholic shop beside college?

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அரசு கல்லூரிக்கு பக்கத்தில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க கட்டுமான பணி நடைபெற்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதியில் அரசு கல்லூரி, செயற்கை புல்வெளி வலைகோல் பந்தாட்ட (ஹாக்கி) மைதானம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன.

எனவே, டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, மாநில குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் அவர்கள், உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சூர்யகலாவிடம் கோரிக்கை மனு வழங்கிவிட்டு தாமாகவே அங்கிருந்து கலைந்துச் சென்றுவிட்டனர்.

 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!