ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் அனுமதிக்க முடியாது…தீபா ஆவேசம்..

Asianet News Tamil  
Published : Feb 13, 2017, 08:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் அனுமதிக்க முடியாது…தீபா ஆவேசம்..

சுருக்கம்

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஓபிஎஸ் சசிகலா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக ஆளுநரைச் சந்தித்து தங்களை ஆட்சி அமைச்ச அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இரு அணிகளும் தங்களுக்கான ஆதரவை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது அரசியல் முடிவு குறித்து ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24-ந் தேதி தெரிவிப்பதாக அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் தீபா திட்டமிட்டுள்ளார்.

மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தொண்டர்களையும் தீபா சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நேற்று பல்வேறு  மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்களை தீபா சந்தித்துப் பேசினார்.

அப்போது சசிகலா ஓபிஎஸ் மோதலில் பல உண்மைகள் வெளிவருவதாக கூறினார். அதனால் தமிழக அரசியலில் தொடர்ந்து பல நல்ல மாற்றங்கள் வருவதாற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் வரவிட மாட்டோம் என ஆவேசமாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Kalaignar Magalir Urimai Thogai: ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? உடனே செக் பண்ணுங்க.!
Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் இன்று முதல் ருத்தரதாண்டவம் ஆடப்போகும் பெய் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? முக்கிய அப்டேட்!