
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக அமைத்துள்ள குழுவுடன் காங்கிரஸ் தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரங்கள் முன்வைக்கப்பட்டன. மிகவும் சுமுகமாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் முடிவில், தொகுதிகள் குறித்த இறுதி முடிவு இன்னும் சில நாட்களில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.