ரூ. 60 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் - தப்பியோடியவர்களுக்கு வலை...

 
Published : Sep 30, 2017, 07:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
ரூ. 60 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் - தப்பியோடியவர்களுக்கு வலை...

சுருக்கம்

Rs. 60 lakh worth of foreign cigarettes were confiscated by the police and handed over to customs officials.

சென்னை யானைக்கவுனியில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

சென்னை யானைக்கவுனியில் சிலர் வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து தனிப்படை போலீஸ் திடீரென அப்பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். 
அப்போது, அந்த பகுதியில் உள்ள கடைகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. 

இதைதொடர்ந்து கடை உரிமையாளகளை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். 

பின்னர், தனிப்படை போலீசார் அங்கிருந்த ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!