
Gangster Nagendran death Chennai : தமிழ்நாட்டின் வடசென்னை பகுதியைச் சேர்ந்த பிரபல தாதா நாகேந்திரன், 1990களில் வடசென்னையில் கோலோச்சிய ரவுடி வெள்ளை ரவி போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர் மீது பல கொலை, கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வட்ட செயலாளர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் நாகேந்திரன் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் நாகேந்திரன் முக்கிய பங்காற்றியது விசாரணையில் தெரியவந்தது.
வேலூர் சிறையில் இருந்தே தனது மகன் அஸ்வந்தாமனுக்காக ஸ்கெட்ச் போட்டு கொடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய வழி வகுத்து கொடுத்தும் நாகேந்திரன் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த் நாகேந்திரன் ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஏ2 குற்றவாளியாக அவரது மகன் அஸ்வந்தாமன் பெயர் சேர்க்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கல்லீரல் செயலிழந்ததால் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் நாகேந்திரன் இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதி கோரி சிறையில் உள்ள அவரது மகன் அஸ்வத்தாமன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளார்.
தந்தை நாகேந்திரனின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என அசுவத்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார. முறையீட்டை கேட்ட நீதிபதி, செம்பியம் காவல்துறை உதவி ஆணையாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே இன்று பிற்பகல் நடைபெறும் விசாரணையில் தான் அஸ்வந்தாமனுக்கு இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதி கிடைக்குமா.? என தெரியவரும்.