
தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவின் உட்கட்சிப் பூசல் வெளிப்படையாகத் தெரிந்தது. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தனது உரையை முடித்த அடுத்த கணமே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சபாநாயகரிடம் பேச அனுமதி கோரினார். சபாநாயகரும் உடனடியாக அவருக்கு அனுமதி வழங்கியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.