இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட புகாரில், தந்தை மற்றும் மகன் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பியோடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை, ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் ராஜ். இவரின் தந்தை ஜீவானந்தம், இவர் ஆலப்பாக்கம் பகுதியில் கவுன்சிலராக இருந்தவர். ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் விபா என்ற இளம் பெண்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு விபாவுக்கு, குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து 10 வருடங்களாக அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், வினோத் ராஜ்-க்கு, வேறொரு பெண்ணை நிச்சயம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த விபா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில், தன்னை வினோத்ராஜ் மற்றும் ஜீவானந்தம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த புகாரில் விபா கூறியிருந்தார்.
இது தொடர்பாக, வினோத்ராஜ், ஜீவானந்தம் ஆகியோரிடம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், ஜீவானந்தம் மற்றும் வினோத்குமார் தப்பியோடியுள்ளனர். இதையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.