அடுத்தடுத்து 55 மீனவர்கள் கைது… ‘திடீர்’ வேலைநிறுத்தம்.. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு ?

Published : Dec 20, 2021, 09:26 AM IST
அடுத்தடுத்து 55 மீனவர்கள் கைது… ‘திடீர்’ வேலைநிறுத்தம்.. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு ?

சுருக்கம்

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன் மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக முதலில் 43  மீனவர்களுடன் 6 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. இதைத்தொடர்ந்து தலைமன்னார் தனுஷ்கோடி இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று மீண்டும் கைது செய்தனர். அத்துடன் அவர்களின் இரண்டு விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டது.  

இதையடுத்து 55 மீனவர்கள் 8 படகுகளை இலங்கை கடற்படையினர் ஒரே நாளில்  கைது செய்தது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இதனை தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். அத்துடன் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு  எழுதியுள்ள கடிதத்தில் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பி வைக்க தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் 24 மணி நேரத்தில் 55 மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதை கண்டித்து, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசுக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதன்படி இன்றும் போராட்டமானது இரண்டாவது நாளாக தொடர்கிறது. பல கோடி அந்நியச் செலாவணி ஈட்டுகொடுக்கக்கூடிய  இந்த மீன்த்தொழில் வேலை நிறுத்த போராட்டத்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை