கிரிஜா வைத்தியநாதன் ஐ ஏ எஸ் தலைமை செயலாளராக பதவியேற்பார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் ராம் மோகன் ராவ் அந்த இடத்தில இருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.
அதனையடுத்து இடியாப்ப சிக்கலில் சிக்கியுள்ள ராம் மோகன் ராவை தொடர்ந்து பதவியில் வைத்து கொண்டால் ஆபத்து என்பதை உணர்ந்த தமிழக அரசு அவரை தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
ராம்மோகன் ராவுக்கு சஸ்பென்ட் உத்தரவு தபால் அஞ்சல் மூலம் அனுப்ப பட்டுள்ளது
TN-04 BG 0789 என்னும் எண் கொண்ட டோயோட்டோ காரில் இருந்த சிகப்பு விளக்கு அகற்றப்பட்டது.
ராம் மோகன் ராவுக்கான ரகசிய பாதுகாப்புகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
இதனையடுத்து ராம் மோகன் ராவின் உதவியாளர் அந்த கடிதத்தை பெற்று கொண்டு கையெழுத்தும் இட்டுள்ளார்
ராம் மோகன் ராவ் சஸ்பென்ட் செய்யபட்டுள்ளதால் எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.