டிஸ்சார்ஜ் ஆன பின்னர் ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. கொண்டாடிய ரசிகர்கள்…

By manimegalai aFirst Published Nov 1, 2021, 8:09 AM IST
Highlights

நான் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைத்து வேண்டிய அனைத்து ரசிக பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: நான் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைத்து வேண்டிய அனைத்து ரசிக பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய மகிழ்ச்சியில் ரஜினிகாந்தும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு ரசிகர்களும் இருக்க திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தி எல்லாரையும் அதிர வைத்தது. தமது வழக்கமான ஸ்டைலில் விருது வாங்கிவிட்டு மேடையில் பேசிவிட்டு திரும்பினார்.

பின்னர் டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து விட்டு உற்சாகமாக சென்னை திரும்பினார். டெல்லி போகும் போதும், பின்னர் சென்னை திரும்பும் போதும் உற்சாகமாக இருந்த ரஜினிக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்களும், ஒட்டு மொத்த ஆதரவாளர்களும் பதறினர்.

சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்ட போது இது வழக்கமான மருத்துவமனை என்று முதலில் சொல்லப்பட்டது. அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் அப்படித்தான் அறிவித்தார். உறவினர் ஒய்ஜி மகேந்திரன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு பேட்டியளித்த போது அண்ணாத்த ரிலீசுக்கு முன்னாடியே வீடு திரும்புவார் என்றார்.

ஆனாலும் அதை நம்பாமல் ஆண்டவனிடம் அவரது ரசிர்கர்கள் பிரார்த்தனை செய்தனர், மண் சோறு சாப்பிட்டு இறைவனிடம் மனம் உருகினர். அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கை அவரது உடல்நிலையில் உள்ள பிரச்னை என்ன என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியது.

தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அதற்கான அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிந்தது, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தான் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

எல்லா சிகிக்சை முடிந்து எப்போது திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் நேற்று அவர் வீடு திரும்பினார். அதே ஸ்பீடு, மாறாத ஸ்டைல் என்று உற்சாகமாக ரஜினிகாந்த் வீட்டுக்குள் திரும்பினார்.

அவருக்கு பூசணி சுற்றி திருஷ்டி கழிக்கப்பட உற்சாகமாக வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார். ரஜினிக்கு குணமாகிவிட்டது என்பதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்க ஹூட் ஆப்பில் ஒரு ஆடியோ வெளியிட்டு அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

ஹூட் ஆப்பில் தமது தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு குரல் பதிவு ஒன்றையும் ரிலீஸ் செய்திருக்கிறார்.

அந்த குரல் பதிவில் ரஜினிகாந்த் கூறி இருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். நான் நல்லாயிருக்கேன். இன்று இரவுதான் வீடு திரும்பினேன். ரொம்ப நன்றாக இருக்கிறேன்.

நான் நல்ல உடல்நலத்துடன் வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று எனக்காக பிரார்த்தனை செய்த அத்தனை நல் உள்ளம் கொண்ட ரசிக பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றி. நான் எப்படி இருக்கிறேன் என்பது பற்றி நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கு நன்றி என்று கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னர் தமது தலைவனின் குரலை கேட்ட ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர். இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் அண்ணாத்த படத்தின் வேலைகளில் ரசிகர்கள் உற்சாகமாக ஈடுப தொடங்கி இருக்கின்றனர்…!

click me!