பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு... அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை!!

By Narendran SFirst Published Sep 27, 2022, 9:05 PM IST
Highlights

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்பட வேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செப்.29 அன்று மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல்... கூடலூரில் 2 நாள் பாதயாத்திரை!!

எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 06/10/2022, 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும்.  (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்) பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் பரபரப்பு திருப்பம்.. நீதிமன்றம் ஸ்ரீமதி பெற்றோருக்கு விதித்த அதிரடி உத்தரவு !

தொடக்கப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சசி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் (ந.எண்.2411/ஈ2/2021 நாள்.26.09.2022) தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரையும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 ஆம் தேதி வரையும் விடுமுறை அறிவித்திக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!