ஐயோ! இதுக்கா உன்ன பாரின்ல படிக்க வைச்சு டாக்டராக்கண! கதறிய பெற்றோர்! நடந்தது என்ன?

Published : Jun 03, 2025, 05:57 PM IST
doctor

சுருக்கம்

தர்மபுரியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் மோனிகா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தனியார் மருத்துவமனை மருத்துவர்

தர்மபுரி கடைவீதி அருகே ஹரிஹரநாத சாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவருடைய மகள் மோனிகா (27). பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். வழக்கம் போல இரவு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் அவர் இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை.

உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவு

இதனையடுத்து ஊழியர் நீண்ட நேரமாக தட்டியும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து ஊழியர்கள் உடனே மருத்துவமனை நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மோனிகா மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

கதறி அழுத பெற்றோர்

அவரை மற்றொரு மருத்துவர் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மோனிகாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்த அவர்கள் மகளின் உடலை பார்த்து நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுதனர். இதற்காகவா உன்னை டாக்டருக்கு படிக்க வைத்தேன் என்று கூறி கதறினர். பின்னர் போலீசார் பெண் மருத்துவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்.

திருமணம் செய்ய ஏற்பாடு

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோனிகாவிற்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு தற்போது திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்து வந்தது தெரியவந்தது. இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!