
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநகர் பகுதியில், திமுக வேட்பாளர் திருமதி. கிருத்திகா தங்கப்பாண்டியன் அவர்களை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், சில ஊடகங்கள் பரப்பி வரும் தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் குறித்து தனது கண்டனத்தை மிகக் காட்டமாகப் பதிவு செய்தார். "உண்மையை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய ஊடகங்கள், உள்நோக்கத்தோடு செயல்படக் கூடாது" என அவர் அட்வைஸ் மற்றும் எச்சரிக்கை விடுத்தார்.