இனி அதிகரிக்கும் மின்வெட்டு..?கையிருப்பு இல்லாத நிலக்கரி..முக்கிய அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

Published : May 13, 2022, 11:23 AM ISTUpdated : May 13, 2022, 11:25 AM IST
இனி அதிகரிக்கும் மின்வெட்டு..?கையிருப்பு இல்லாத நிலக்கரி..முக்கிய அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

சுருக்கம்

நிலக்கரி தட்டுபாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தமுள்ள 5 அலகுகளில் நான்கில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஒரே ஒரு அலகில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.  

நிலக்கரி தட்டுபாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தமுள்ள 5 அலகுகளில் நான்கில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஒரே ஒரு அலகில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3 வது அலகு தவிர மற்ற நான்கு அலகுகளிலும் மின் உற்பத்தி இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: india inflation : பணவீக்கத்தால் ஏழைகளைவிட பணக்காரர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்: நிதி அமைச்சகம் வருத்தம்

தற்போது அனல்மின் நிலையத்தில் கையிருப்பில் உள்ள நிலக்கரியை வைத்து 5 அலகுகளையும் இயக்க முடியாததால், நிலக்கரி கையிருப்பு அதிகரிக்கும் வரை ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: மகிழ்ச்சி செய்தி..! மாணவர்களே அலர்ட்.. நாளை முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாட்கள் விடுமுறை..?

PREV
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை