திருச்சியில் இருந்து மும்பைக்கு புதிய விமான சேவை; எப்போது தொடங்குது?

Asianet News Tamil  
Published : Feb 16, 2018, 08:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
திருச்சியில் இருந்து மும்பைக்கு புதிய விமான சேவை; எப்போது தொடங்குது?

சுருக்கம்

New flight from Trichy to Mumbai When start?

திருச்சி

புதுடெல்லியிலிருந்து திருச்சி வழியாக மும்பைக்கு புதிய விமான சேவையை மார்ச் 25 முதல் தொடங்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஏற்கெனவே புதுடெல்லியில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் தினசரி விமானப் போக்குவரத்து சேவையை திருச்சி வழியாக மாற்றியமைத்து இந்த புதிய திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.

புதுடெல்லியில் இருந்து வரும் விமானம் திருச்சிக்கு தினமும் பிற்பகல் 2 மணிக்கு வந்து சேரும். பின்னர், 2.30-க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு மாலை 4.40 -க்கு சென்று சேரும்.

இந்தச் சேவையை வரும் மார்ச் 25 முதல் செயல்படுத்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு உள்ளன.

இனி திருச்சியிலிருந்து மும்பைக்கும் கூடுதலாக தினசரி விமான சேவையை பெறலாம் என்று திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

ஹார்வர்டுக்கே டஃப் கொடுக்கும் சீனா.. இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த VIT!
அமைச்சர் துரைமுருகன், கவிஞர் யுகபாரதிக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..