இன்னும் ஒரு வாரத்தில் தொடங்குகிறது பருவ மழை – சென்னை வானிலை மையம்

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 06:36 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
இன்னும் ஒரு வாரத்தில் தொடங்குகிறது பருவ மழை – சென்னை வானிலை மையம்

சுருக்கம்

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் வரும் 27ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவ மழைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வரிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சமயபுரத்தில் 5செ.மீ.மழையும், லால்குடியில் 4செ.மீ.மழையும் பதிவாகிஉள்ளது.

PREV
click me!

Recommended Stories

CM Vijay: டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிய சங்கீதா! சமரசமா? அரசியல் நிர்பந்தமா?
Indian Railways: உலகத் தரத்திற்கு மாறும் தமிழ்நாடு ரயில் நிலையங்கள்.! மத்திய அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு.! உங்க ஊரு இருக்கா?