ஆண், பெண் பாரபட்சமின்றி மொட்டையடித்து முதல்வருக்கு மரியாதை…

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 11:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
ஆண், பெண் பாரபட்சமின்றி மொட்டையடித்து முதல்வருக்கு மரியாதை…

சுருக்கம்

கரூர்,

கரூரில், முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அதிமுகவினர் அஆண், பெண் பாரபட்சமின்றி மொட்டையடித்து முதல்வருக்கு மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி தமிழகத்தில் பலர் மொட்டையடித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் கரூர் மாவட்டத்திலும் ஜெயலலிதாவின் உருவப்படத்தின் முன்பு அமர்ந்து அதிமுகதொண்டர்கள் ஆண், பெண் என அனைவரும் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று கரூர் நகர் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர், மொட்டை அடித்துக்கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

அதே போன்று அந்த பகுதியில் உள்ள பெண்கள் பலர் பூ முடி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக அவர்கள் ஜெயலலிதாவின் உருவப்படம் முன்பு அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடத்தினர்.

இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி