பரபரப்பு !! பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. எல்.கே.ஜி மாணவன் உடல் நசுங்கி பலி..

By Thanalakshmi VFirst Published Jun 27, 2022, 11:39 AM IST
Highlights

நெல்லையில் பள்ளி ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சிக்கிய எல்.கே.ஜி மாணவன் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நெல்லை மாவட்டம் வெட்டியபந்தியில் வசவப்புரம் - செய்துங்கநல்லூர் சாலையில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

மேலும் படிக்க:10, 12 ல் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு.. இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்..தெரிந்துக்கொள்ள வேண்டியவை?

இதில் கவிழ்ந்த ஆட்டோவிற்கு அடியில் சிக்கிய எல்.கே.ஜி மாணவன் செல்வ நவீன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். மேலும் இந்த விபத்தில் 5 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

மேலும் படிக்க:ஆன்லைன் ரம்மிக்கு தடை.?பரிந்துரை குழு அறிக்கை முதல்வரிடம் ஒப்படைப்பு.! அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:Alert : சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் ஷாக்! ஜூலை 1 முதல் அமல் !

பள்ளிக்கு 6 மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 வயது எல்.கே.ஜி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

click me!