கரூர் சம்பவம் - பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!

Published : Sep 28, 2025, 12:52 PM IST
PM Modi

சுருக்கம்

கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் த.வெ.க., தலைவர் விஜய் மாவட்ட வாரியாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று கரூரில் அவர் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது அங்கு ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் ஆறுதல் கூறிவருகின்றனர். இந்நிலையில், இந்த அசம்பாவிதத்திற்கு முழுப்பொறுப்பும் தா.வெ.கா தலைவர் விஜய் ஏற்கவேண்டும் என்றும் அவர் கைது செய்யப்படவேண்டும் என மக்கள் கொந்தளிப்புடன் சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

த வெ க கட்சியின் தலைவர் விஜய் தனது சமூக ஊடகத்தில் இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சமும், அளிப்பதாக கூறியுள்ளார் அதோடு இதயமும், மனமும் கனத்து போகிறது, இதிலிருந்து நாம் அனைவரும் மீண்டு வருவோம் என தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விஜயின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 நிதி உதவி செய்வதாக தெரிவித்து இருக்கிறார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்