
தாய்ப்பால் புற்றுநோயை தடுக்கும் என்பதை உணர்த்த வேண்டும் என நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பியுள்ளார்.
1. பேறுகால விடுப்பு கால கட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது?
2. 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்க கூடாது?
3. 2 குழந்தைகளுக்கு மட்டுமே பேறுகால விடுப்பு என்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது?
4. குழந்தைகளுக்கான உணவுப்பொருள் விளம்பரப்படுத்துதல் தடைச்சட்டம் முறையாக
அமல்படுத்தப்படுகிறதா?
5. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மூலம் ஏன் விழிப்புணர்வு கொண்டு வரக் கூடாது?
6. பேறுகாலத்திற்கு சிறப்பு காப்பீடு திட்டங்கள் ஏன் கொண்டு வரக் கூடாது?
7. பணிக்கு செல்லும் பெண்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து ஏன் விளம்பரப்படுத்தக் கூடாது?
8. தமிழகம் போல மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கும் பேறுகால விடுமுறையை 9 மாதமாக ஏன் அதிகரிக்க கூடாது?
மேலும் இதுகுறித்து ஜன.22 ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.