
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் தமிழ்நாடு பாஜகவின் தயார்நிலை குறித்து பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் ஜே.பி. நட்டா மாநில மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கவும், கட்சியின் நிறுவனப் பணிகளை மேற்கொள்ளவும் மூத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
ஜே.பி.நட்டா ஆலோசனை:
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு விவகாரங்களுக்கான தேசிய இணைப் பொறுப்பாளர் பி. சுதாகர் ரெட்டி, தேசிய மகிளா மோர்ச்சா தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
"கூட்டத்தில், எங்கள் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், 2026 தேர்தலில் திமுக அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து வெளியேற்றவும், மாநில சட்டமன்றத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பாஜக உறுப்பினர்கள் இடம்பெறுவதை உறுதி செய்யவும் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்" என்று வினோஜ் பி செல்வம் தெரிவித்தார்.
சைவ் சித்தாந்த மாநாடு:
மத்திய சுகாதாரம், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரான நட்டா, தர்மபுரம் ஆதீனத்தின் தலைமையில் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெறும் ஆறாவது சர்வதேச சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் வந்துள்ளார்.
"6வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாட்டிற்கான அன்பான செய்தி மற்றும் ஆசீர்வாதங்களுக்காக மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவரது வார்த்தைகள் பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை நிலைநிறுத்த எங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன" என்று SRM பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் பாரிவேந்தர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.