சந்திரபாபு வருகையால் நசுங்கிப்போன 3 முதல்வர்கள்

First Published Dec 6, 2016, 3:08 PM IST
Highlights


முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான மாநில முதல்வர்களும், கட்சி தலைவர்களும், அதிகாரிகளும் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான சந்திரபாபு நாயுடு Z  ப்ளஸ் பாதுக்காப்புடன் அஞ்சலி செலுத்த வந்தார்.

ஏற்கெனவே அங்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தார் அதே நேரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் அவ்விடத்திற்கு வருகை தந்தார்.

இதனால் அங்கு திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் அங்கு நின்றிருந்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ,சித்தராமையா,கெஜ்ரிவால் ஆகிய மூவரும் கூட்டத்திற்குள் சிக்கி நசுங்கினர்.

ஆனால் உடனடியாக Z ப்ளஸ் பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

click me!