ஏழை மக்களின் நலனுக்காக வாழ்ந்தவர் ஜெயலலிதா - மத்தியபிரதேச முதல்வர் புகழாரம்

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 02:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
ஏழை மக்களின் நலனுக்காக வாழ்ந்தவர் ஜெயலலிதா - மத்தியபிரதேச முதல்வர் புகழாரம்

சுருக்கம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

நீர்ச்சத்து குறைபாட்டால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதயம் செயல் இழப்பால், நேற்று இரவு மரணமடைந்தார். 

சென்னை, ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதரமர் மோடி, கவர்னர் வித்தியாசாகர் ராவ்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ஜெயலலிதா மறைவு செய்தி கேட்டதும், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார். அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணச்செய்தி கேட்டு மிகவும்அதிர்ச்சி அடைந்தேன். அவரின் பிரிவால் வாடும் தமிழக மக்களுக்கு மனவலிமையை இறைவன் தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னைக்கு நேரில் வந்து மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அஞ்சலி செலுத்தினார். அப்போது ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆறுதல் தெரிவித்தார். 

அதன்பின் அங்கிருந்து புறப்படுகையில், நிருபர்களிடம் அவர் கூறுகையில்,  “ ஏழைமக்களின் நலனுக்காக வாழ்ந்தவர். தனது வாழ்க்கையை அதற்காக செலவிட்டவர் ஜெயலலிதா. அவரின் இழப்பு அரசியலில் ஈடுகட்டமுடியாது” என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

தேமுதிக யாருடன் கூட்டணி? 'முடிவெடுத்து விட்டேன்'.. ஆனால்?? சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா! முக்கிய அறிவிப்பு!
உள்ளே வரும் முக்கிய கட்சி..! தென் தமிழகத்தில் சறுக்கல்... காத்திருந்து ஏமாந்த திமுக..!