பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடக்குமா?....ஜனவரி 3ல் திமுக ஆர்ப்பாட்டம்…

First Published Dec 20, 2016, 1:12 PM IST
Highlights


பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடக்குமா?....ஜனவரி 3ல் திமுக ஆர்ப்பாட்டம்…

தைப் பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுதான்…தமிழர்களின், ரத்தத்திலும்,உணர்வுகளிலும் ஒன்றரக் கலந்துள்ள ஜல்லிகட்டுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தடைதான்.

ஜல்லிக்கட்டு நடக்காமல் அலங்காநல்லுர்,அவனியாபுரம் போன்ற ஊர்கள் வெறிசோடிக் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தும், உச்சநீதிமன்றம் விதித்த தடையால் தடைப்பட்டது.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் மத்திய ,.மாநில அரசுகள்  ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி வரும் 3 ஆம் தேதி அலங்காநல்லுரில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பர்ட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

click me!