சாலைப் பணியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை வேண்டும் - புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்...

 
Published : Jan 23, 2018, 10:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
சாலைப் பணியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை வேண்டும் - புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

Investigation on Road Safety Workers - Youth Leading Demonstration

தேனி

போடி- அகமலை சாலைப் பணியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனியில் மலை கிராம மக்களுக்கு சாலை வசதி செய்து தரக் கோரி புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலர் லெனின், மாவட்டச் செயலர் முனிச்சாமி, தேனி ஒன்றியச் செயலர் சண்முகப்பிரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "போடி- அகமலை சாலைப் பணியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

அகமலை மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும்.

அரசு சலுகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகமலை, அண்ணாநகர், கரும்பாறை, எருமைத்தொழு, ஊரடி, ஊத்துக்காடு, வாழைமரத்தொழு, விக்கிரமாதித்தன்தொழு, கூணியாறு, கானாமஞ்சி, முத்துக்கோம்பை, உலக்குருட்டி ஆகிய மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!