விசாரணை வளையத்திற்குள் வருகிறார் ஹிப் ஹாப் ஆதி ..! திருப்புமுனையில் ஜல்லிக்கட்டு பிரச்சனை..!

Asianet News Tamil  
Published : Feb 02, 2018, 07:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
விசாரணை வளையத்திற்குள் வருகிறார் ஹிப் ஹாப் ஆதி ..! திருப்புமுனையில் ஜல்லிக்கட்டு பிரச்சனை..!

சுருக்கம்

hiphop adhi going to enquire about jallikattu soon

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முன்நின்று நடத்திய சினிமா நடிகர்கள் அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்ற ஆண்டு,மெரினாவில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஜல்லிகட்டுக்கு எதிராக  விலங்கு நல வாரிய அமைப்பு பீட்டா,ஜல்லிக்கட்டு   நடத்தக்கூடாது என நீதின்மன்றதில் தடை வாங்கியது.

அதனை தொடர்ந்து  தமிழக இளைஞர்கள்,தம்முடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடந்தே தீர வேண்டும் என ஒரு வார காலமாக போராடி வெற்றி  பெற்றனர்

அப்போது  சில நடிகர்களும் போராட்டத்தில் களமிறங்கினர்..அதில் குறிப்பாக ராகவா   லாரன்ஸ்,ஹிப்  ஹாப் ஆதி  உள்ளிட்டோர் தற்போது விசாரணை  வளையத்திற்குள்  வர  உள்ளனர்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஹிப்ஹாப் ஆதி, சிவசேனாதிபதியிடம் விசாரணை நடத்தப்படும் என  ஜல்லிக்கட்டு விசாரணை ஆணைய நீதிபதி ராஜேஷ்வரன் தெரிவித்து உள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தீ வைக்கும் பெண் காவலர் யார் என்றே தெரியவில்லை என காவல் துறை அதிகாரகள் தெரிவக்கின்றனர்.காவல் துறையினர் தீவைத்த பெண் காவலரை மறைப்பதாகவே தெரிகின்றது என்றும்  ஜல்லிக்கட்டு விசாரணை ஆணைய நீதிபதி ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

அதிமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருக்கு முக்கிய பதவி.. போட்டியிடும் தொகுதி இதுதான்?
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!