மக்களே உஷார் !! 5 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

By Thanalakshmi VFirst Published Aug 20, 2022, 2:06 PM IST
Highlights

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நீலகிரி , கோவை, தேனி, திண்டுக்கல் , திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

20.08.2022 மற்றும்‌ 21.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

 22.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

23.08.2022 மற்றும்‌ 24.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல் மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு
இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ மாலை அல்லது இரவு நேரங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை
28-29 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேலும் படிக்க:மாணவர்கள் வேலையெல்லாம் செய்யக்கூடாது.. வேணுமென்றால் பணியாளர்களை போடுங்கள்.. காட்டமான உத்தரவு

 மீனவர்களுக்கான எச்சரிக்கை:

20.08.2022: இலங்கை கடலோர பகுதிகளை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

வட ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

22.08.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள - கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

23.08.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள - கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

24.08.2022: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள - கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென் கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்.. தெரிந்துக்கொள்ள வேண்டியவை..?
 

click me!