எச்சரிக்கை!! அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. சென்னையில் மிதமான மழை.. வானிலை அப்டேட்..

By Thanalakshmi VFirst Published May 16, 2022, 2:57 PM IST
Highlights

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வட தமிழக கடலோரம்‌ மற்றும்‌ வட தமிழக உள்‌ மாவட்டங்களின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக,

16.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌,
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, கரூர்‌, திருச்சி மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, கரூர்‌, திருச்சி, திருவண்ணாமலை மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, கரூர்‌, திருச்சி, திருவண்ணாமலை மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு
இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

20.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

16.05.2022 முதல்‌ 17.05.2022 வரை: இலட்சதீவு, கர்நாடகா, கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ கிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌
வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

18.05.2022 முதல்‌ 19.05.2022 வரை: இலட்சதீவு, கர்நாடகா, கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ கிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌
வீசக்கூடும்‌. மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்பகுதி, தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌
வீசக்கூடும்‌.

20.05.2022: மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ பகுதி, தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌
வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.. இந்தாண்டு 2 லட்சம் பரிசோதனை.. அமைச்சர் மா.சுப்ரமணியன்
 

click me!