தொடரும் கன மழை!சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை-ஆட்சியர்கள் உத்தரவு

By Ajmal KhanFirst Published Dec 12, 2022, 1:10 PM IST
Highlights

சென்னையில் கன மழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை

வட உள் தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்திருந்தது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனையடுத்து ஒரு காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் உள்ள ஒரு சில தாலுக்காவில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் அனைத்தது பள்ளிகளுக்கும் அரைநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தவிட்டுள்ளனர். 

இதையும் படியுங்கள்

வட மாவட்டங்களில் வேலையை காட்டப்போகும் கனமழை.. எப்போ தெரியுமா? வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

click me!