தலைமை செயலாளராக பதவியேற்றார் கிரிஜா வைத்யநாதன்..!!!

First Published Dec 23, 2016, 12:19 PM IST
Highlights


தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதில் அவர் வீட்டில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் ஏராளமான ஆவணங்கள், சிடிக்கள், லேப்டாப்,முதலியவை கைப்பற்றப்பட்டது.

மிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக தலைமை செயலகத்தில் புகுந்து வருமனவரிதுறையினர் சோதனை நடத்தியது இந்தியாவெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன் ராவை சஸ்பென்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.

இந்நிலையில் நேற்று கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கிரிஜா வைத்தியநாதன், 1981 ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

இன்று தலைமை செயலகத்தில் கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்று கொண்டார்.

click me!