
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது தொடர் வாடிக்கையாகி விட்டது. சிறைபிடித்துச் செல்லப்பட்ட 33 க்கும் அதிகமான மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களின் இந்த அறவழிப் போராட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்குமா?