குழந்தைகளை கொன்று, பெற்றோரும் தூக்கிட்ட சோக சம்பவம்..!

First Published Oct 28, 2017, 3:27 PM IST
Highlights
family suicide in tirupur


திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் லதா. அரசுப் பள்ளி ஆசிரியையான இவரது கணவரின் பெயர் செந்தில் குமார். இவர்களுக்கு விசிதா, விவிதா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகள் இருவரையும் கொலை செய்துவிட்டு பெற்றோரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசுப் பள்ளி ஆசிரியை குடும்பத்துடன் இறப்பதற்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

click me!