குடும்பத்தகராறில் அண்ணன் தங்கை வெட்டிக்கொலை – சென்னையில் பயங்கரம்…!!!

Asianet News Tamil  
Published : Jul 03, 2017, 08:45 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
குடும்பத்தகராறில் அண்ணன் தங்கை வெட்டிக்கொலை – சென்னையில் பயங்கரம்…!!!

சுருக்கம்

family problems brother and sister is murder at chennai pallikkaranai

சென்னை பள்ளிக்கரணை அருகே குடும்பத்தகராறு காரணமாக அண்ணன், தங்கை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சாயிபாபா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஒருவர் அண்ணனையும் தங்கையும் அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார்.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வெட்டியவரை தடுக்க வந்த மற்றொருவரையும் வெட்டி விட்டு அந்த கொலையாளி அங்கிருந்து தப்பி சென்றார்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

சென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!
அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. குலுக்கல் முறையில் காரைத் தூக்கிய அஜித்! டிராக்டர் வென்ற குலமங்கலம் காளை!