கண் தானம் பற்றிய விழிப்புணர்வு… ஆவடியில் மக்கள் வரவேற்பை பெற்ற திருமணம்!!

Published : Sep 25, 2022, 04:50 PM IST
கண் தானம் பற்றிய விழிப்புணர்வு… ஆவடியில் மக்கள் வரவேற்பை பெற்ற திருமணம்!!

சுருக்கம்

ஆவடியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் திருமண அழைப்பிதழ் முதல் மண்டபம் வரை கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்டது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆவடியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் திருமண அழைப்பிதழ் முதல் மண்டபம் வரை கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்டது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஆவடியில் செப்டம்பர் 9 ஆம் தேதி, மானசி மகாலிங்கம் மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு ஒரு கல்யாண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கண் தான விழிப்புணர்வு குறித்து பிரச்சாரம் செய்யும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அசோசியேஷன் ஃபார் ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் ப்ரொஃபஷனல்ஸ் - இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைவரான மணமகளின் தந்தை மகாலிங்கம், கண் தானம் குறித்த செய்தியை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எடுத்துச் செல்ல இந்த திருமணத்தை பயன்படுத்த முடிவு செய்தார். கண் மருத்துவரான மானசியால், இந்த பணி எளிதாக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வில் மணமகனும் அவரது குடும்பத்தினரும் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: எங்களுடைய அமைதியும் ஒரு எல்லைக்கு தான்..! ஒருவரையும் விட மாட்டேன்...? இறங்கி அடிக்கும் அண்ணாமலை

திருமண அட்டை அதன் மூலைகளில் ஒரு ஜோடி கண்களின் உருவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் நாம் ஒவ்வொருவரும் கண் தானத்திற்கு தூதராக இருக்க வேண்டும் (தானத்தில் உயர்ந்தது கண் தானம்) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. அரங்கம் முழுவதும் உள்ள பேனர்களிலும் இதே போன்ற செய்தி இருந்தது. மண்டபத்தின் நுழைவாயிலில் கண் தானம் மற்றும் உறுதிமொழிப் படிவங்களை விநியோகிக்கும் ஊழியர்களைக் கொண்ட ஸ்டால் அமைக்கப்பட்டது. விருந்தினர்கள் ஸ்டாலில் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய, வரவேற்பின் போது அடிக்கடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட தாம்பூலம் பையில் கூட கண் தானம் பற்றிய வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. 3000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இருந்ததாகவும், 150க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் உறுதிமொழிப் படிவத்தை சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருவேங்கடநாதபுரம் கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவை.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

இதுக்குறித்து மகாலிங்கம் கூறுகையில், இணையத்தில் பலர் உறுதிமொழிப் படிவத்தை எடுத்துக் கொண்டோம், சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அதைச் சமர்ப்பிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை கண் தானம் இரண்டு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த திருமணத்தை பறை சாற்றுவதற்கான ஒரு சிறந்த தளமாக கருதுகிறேன். உறுதிமொழி படிவங்கள் சங்கர நேத்ராலயாவிடம் சமர்ப்பிக்கப்படும். அது அந்தந்த முகவரிகளுக்கு அட்டைகளை அனுப்பும். தங்கள் கண்களை தானம் செய்ய ஒப்புக்கொண்ட நபர்களின் விவரங்களும் அருகிலுள்ள கண் மருத்துவமனைகளுக்குச் செல்லும், எனவே நன்கொடையாளரின் குடும்ப உறுப்பினர்கள் அருகிலுள்ள மருத்துவமனையை அணுகலாம் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கட்டம் கட்டும் திமுக..? ஸ்டாலினுக்காக களம் இறங்கும் இந்தியா கூட்டணி
வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!