“காலாவதியான சாக்லேட்டுகளை சாப்பிட்ட ‘100 மாணவர்களுக்கு’ வாந்தி, மயக்கம்..!!!” – விழுப்புரத்தில் பரபரப்பு..!!

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 05:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
“காலாவதியான சாக்லேட்டுகளை சாப்பிட்ட ‘100 மாணவர்களுக்கு’ வாந்தி, மயக்கம்..!!!” – விழுப்புரத்தில் பரபரப்பு..!!

சுருக்கம்

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி சாலையில் காலாவதியான ஏராளமான சாக்லேட்டுகளை யாரோ கொட்டி சென்றுள்ளனர்.

இதனை கண்ட அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ரோட்டில் கொட்டி கிடந்த சாக்லேட்டுகளை எடுத்து சாபிட்டுள்ளனர்.

சாக்லேட்டுகளை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிருந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் சாலையில் காலாவதியான சாக்லேட்டுகளை கொட்டி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனையில் ஒன்று திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி
ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்