ஏறுதழுவுதலை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

First Published Dec 19, 2016, 11:54 AM IST
Highlights


சிங்கம்புணரியில் ஏறுதழுவுதலை நடத்தக் கோரி தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். சரவணன், சந்திரமோகன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் மதிவாணன், மாவட்ட செயலாளர் பிரிட்டோ, மாவட்ட தலைவர் அருணா சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஒன்றிய செயலாளர் அன்புச்செழியன் வரவேற்று பேசினார். சிங்கம்புணரி நகர ஒருங்கிணைப்பாளர் ஃபாரூக் முகமது அலி நன்றி கூறினார்.

click me!