12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி - அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக  அரசுக்கு கோரிக்கை...

 
Published : May 23, 2018, 07:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி - அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக  அரசுக்கு கோரிக்கை...

சுருக்கம்

English Language education up to Class 12 - Government School Students Request to Tamilnadu Government ...

கரூர்

12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கொண்டுவர வேண்டும் என்று கரூர் அரசு பள்ளி மாணவ -  மாணவிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கும் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்கும் முறையை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். 

இதனையடுத்து கடந்த 2012 - 2013-ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

கரூர் மாவட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் கரூர் நகராட்சியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியிலும் கல்வி கற்பிக்கப்பட்டு இதற்கென தனி வகுப்புகள் உள்ளன. 

ஆனால், இப்பள்ளியை தவிர வேறு எந்த பள்ளியிலும் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில மொழியில் கல்வி கற்பிக்கும் வகுப்புகள் இல்லை. 

கரூர் மாவட்டத்தில், கரூர் நகராட்சிக்கு அடுத்து குளித்தலை நகராட்சி உள்ளது. இங்கு அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் என இரண்டு பள்ளிகள் உள்ளன. இந்த இரண்டு பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே ஆங்கில மொழியில் கல்வி கற்பிக்கும் வகுப்புகள் உள்ளன.

இதனால் 10-ஆம் வகுப்பு முடித்த மாணவ - மாணவிகள் தங்கள் மேற்படிப்பை தொடர அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேரவேண்டிய நிலை உள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர். 

பொருளாதார வசதி இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில மொழி வழியில் படித்திருந்தாலும், 11-ஆம் வகுப்பிற்கு செல்லும்போது தமிழ் மொழி வழியிலேயே கல்வி கற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் மனதளவில் மாணவ - மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே, ஏழை மாணவ - மாணவிகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டு முதலே கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்து குளித்தலை நகராட்சி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு மேல்நிலைப் பள்ளிகளிலாவது 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வி துறை மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று மாணவ - மாணவிகள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்